Ads 468x60px

Sunday, November 4, 2012

கமல் பிறந்த தின நற்பணி ( 58 மரக்கன்றுகள் + உணவு )

உலக நாயகனின் 58 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர் தங்கவேலு தலைமையில், ORKUT கமல்ஹாசன் நற்பணி இயக்கம் ( பதிவு எண் 10094) சார்பில், குரோம்பேட்டை பால ஆசிரமம், அதன் குழுமத்தில் உள்ள ஆவடி மற்றும் மடிப்பாக்கம் ஆசிரமத்திலும் நவம்பர் 4, ஞாயிறு அன்று ஆசிரம குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.








மேலும் உலக நாயகனின் 58 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, 58 மரக்கன்றுகள் குரோம்பேட்டையில் தங்கவேலு தலைமையில் நடப்பட்டது.

மரக்கன்றுகள் நடப்பட்டதன் காரணம் என்னவென்றால், வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக மரங்கள் வளர்க்கப்படுவதில்லை, மரங்கள் குறைவதால் மழை சரியாக பெய்வதில்லை, மழை பெய்வது பாதிக்கபடுவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது, கடைசியில் விலைவாசி உயர்ந்து விடுகிறது.  எனவே மரங்கள் வளர்த்தால் மழை பெய்யும், மழை பெய்தால் விவசாயம் சிறக்கும், விவசாயம் சிறப்பாக நடந்தால் விளைச்சல் அதிகரிக்கும் விலைவாசியும் குறையும்.




இந்த விழா சிறப்பாக நடக்க களத்தில் ஆர்வத்துடன் பணிபுரிந்த, தயாளன் (தென் சென்னை பொருளாளர்), தமீம், ராஜ்குமார், ஓம், சேகர், மாமூத் அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை இப்பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
 



- சண்டியர் கரன்

0 comments:

Post a Comment