Ads 468x60px

Thursday, September 13, 2012

தாழ்த்தப்பட்ட சிறுமி : கமல் கவிதை

1996-ல் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சிறுமி தனம், ஆசிரியர் அடித்ததில் ஒரு கண் இழந்தார்.

அந்த சிறுமியின் கண் சிகிச்சைக்கு 1996-ல் ரூ 10000/- நிதி உதவி அளித்து, தாழ்த்தப்பட்ட சிறுமியின் அவலநிலையை உணர்த்தும், கமல்ஹாசன் எழுதிய கவிதை இது.



தமிழ் மகளுக்கு,

தேடித் தேடி மருத்துவம் செய்தும்
மாறாது இந்த சாதி சுரம்


கேடிகள் ஆயிரம் கூட்டணி சேர்ந்து
கேட்டில் வந்து முடிந்தது காண் !


காவியும் நாமமும் குடுமியும் கோசமும்
கண்டு மயங்கும் மந்தைகளாய்


ஆகிப் போனதில் வந்த விளைவுகள்
சொல்லி புரியும் வேளையிலே


ஆரிய வேடத்தை திராவிடன் பூண்டதில்
காரியம் கெட்டு போனது காண் !


ஓசையும் பூசையும் பார்பனன் சொல்படி
ஆயிரம் ஆண்டுகள் செய்ததனால்
ஆகமம் பழகிப் போனது காண் !


அன்றொரு பெரியவர் சாடிய சாடலில்
காவியின் வண்ணம் சற்றே மாறி
கருப்பாய் சிவப்பாய் திரியுது காண் !


சாதியும் சாமியும் சாராயம் போல்
சந்தை கடையில் விற்குது காண் !


சர்கார் எத்தனை மாறி வந்தாலும்
மாறா வர்ணம் நாலும் காண் !


புத்தன் சொன்ன தம்மிம பதத்தில்
பாதி மட்டுமே பிரபலம் காண் !


                                        -கமல்ஹாசன்

4 comments:

  1. கமல்ஹாசனின் இந்தக் கவிதையையும், நிகழ்வையும் தங்கள் தளம் மூலமே அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
  2. சித்திரவீதிக்காரரே...

    இன்னும் நிறைய இருக்கு ஆழ்வார்பேட்டை ஆண்டவரை பற்றி....
    கொஞ்சம் கொஞ்சமாக இங்கே வெளியிடுவேன்.... வருகைபுரியவும் தொடர்ந்து....

    ReplyDelete
  3. அற்புதக் கவிஞ்கா..!!
    ஆரவாரம் இல்லா பூமியல்லயிது..!!
    கவிதைகள் படித்து.த.!!
    மனம் திருந்த..!!
    இருப்பினும் எழுதுவோம்..!!
    எவரேனும் திருந்த..!!

    மனோ
    தேவர்குளம்
    திரு நில் வேலி

    ReplyDelete