Ads 468x60px

Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

Thursday, March 7, 2013

விஸ்வரூபத்தில் பெண்களின் விஸ்வரூபம்

தாய்மொழி, தாய்நாடு, "மாதா,பிதா,குரு,தெய்வம்" என்று பெண்களுக்கு, வார்த்தைகளில் முதலிடம் கொடுத்திருந்தாலும், தமிழ் சினிமாவில் நேற்று வரை அவர்கள் ஆண்களுக்கு அடுத்த இடமே.

குறிப்பாக ரஜினி படங்களில் பெண்களின் நிலைமை மிகவும் மோசமே. அவர் படங்களில் தான், உயரத்துடிக்கும் பெண்களின் காலை வாரிவிடும் வசனங்கள் அதிகமாக இருக்கும். மேலும் அவர் படங்களில் கதாநாயகியை பாடல்களுக்கு வந்து ஆடி விட்டுப்போகும் பொம்மையாக தான் பயன்படுத்தியிருப்பார்கள்.

மாறாக, கமல்ஹாசன் மட்டுமே தன் படங்களில் ஆரம்பகாலத்திலிருந்தே பெண்களுக்கு எதிராக இந்த சமுதாயத்தில் நிகழும் கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார், அவர்களுக்காக தனி படமே எடுத்துள்ளார்.

மகாநதி படத்தில் சிறுமிகள் கடத்தப்பட்டு அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்த படுவதை, மகளிர் மட்டும் படத்தில் அலுவலகங்களில் பெண்கள் எப்படியெல்லாம் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதை
துணிந்து காட்டியுள்ளார்.

மும்பை எக்ஸ்பிரஸ், வேட்டையாடு விளையாடு படங்களில்  பெண்களும் தைரியமாக இரண்டாவது திருமணம் செய்யலாம் என்று ஆதரவு கொடுத்துள்ளார்.



இதையெல்லாம் தாண்டி, இன்று விஸ்வரூபத்தில் கதாநாயகனை விட கதாநாயகியால் தான் நியூயார்க் நகரமே காப்பாற்ற படுவதாக காட்டி, தமிழ் சினிமாவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கதாநாயகிகளை முதல் இடத்திற்கு முன்னேற்றியுள்ளார்.

விஸ்வரூபத்தில் வரும் மூன்று முக்கிய இந்திய பெண் கேரக்டர்களும் நன்கு படித்தவர்கள்,


1. நிருபமா (Nuclear Oncologist)

2. அஷ்மிதா (RAW Agent)

3. ஷரினா வாகப் (Psychiatrist)

இது ஆப்கானிஸ்தான் பெண்களை விட இந்திய பெண்கள் எவ்வளவு வேகமாகவும், அதிக எண்ணிக்கையிலும் முன்னேறி வருகிறார்கள் என்பதன் விஸ்வரூப குறியீடு தானே.

அன்று பாரதி கனவு கண்ட புதுமைப்பெண்களை கமல்ஹாசன் தன் விஸ்வரூபத்தில் படைத்துள்ளது பெண்களுக்கு "மகளிர் தினம் 2013" பரிசு என்றால் மிகையாகாது.