Ads 468x60px

Thursday, January 2, 2014

சத்யராஜுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்

இந்தவாரம் (8-ஜனவரி-2014) ஆனந்த விகடனில் கமல்ஹாசனுடன் நடித்த அனுபவங்கள் பற்றிய கேள்விக்கு சத்யராஜின் பதில் :


என் சினிமா வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான காலகட்டமும் கமல் சார் முன்னாலதான் நடந்திருக்கு. அவர்கூட என் முதல் படமான 'சட்டம் என் கையில்’ ஷூட்டிங் ஏ.வி.எம்-ல நடக்குது. ஒரு சண்டைக் காட்சியில பல்டி அடிக்கும்போது, கைல கட்டியிருந்த 650 ரூபாய் மதிப்புள்ள வாட்ச் உடைஞ்சிடுச்சு. அப்ப 650 ரூபாய் பெரிய தொகை. அந்தப் படத்துல நடிக்கிறதுக்கு எனக்கு சம்பளமே 500 ரூபாய்தான். முதல் படத்துலயே 150 ரூபாய் நஷ்டம். இதை கமல் சார்கிட்ட சொன்னேன். 'சத்யராஜ்... சினிமாவுல ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும். ஜட்டியைத் தவிர நாம எதுவும் சொந்தமா யூஸ் பண்ணக் கூடாது’னு டிப்ஸ் கொடுக்கிற மாதிரி கலாய்ச்சார்.

எனக்கு பெரிய திருப்புமுனை கொடுத்த 'காக்கிச்சட்டை’ பட 'தகிடு தகிடு’ வசனத்தின் முதல் ரசிகர் கமல் சார்தான். அந்தக் காட்சியின் படப்பிடிப்பு, ராத்திரி 12 மணிக்கு நடந்தது. ஸ்க்ரிப்ட்ல இல்லாம நடிக்கும்போது 'தகிடு தகிடு’னு நான் சொன்ன வசனம் தூரத்துல நின்னவங்களுக்குக் கேக்கலை. ஆனா, பக்கத்துல நின்ன கமல் சார் கேட்டுட்டு பெருசா சத்தம்போட்டுச் சிரிச்சிட்டார். 'இது சிரிக்கிற சீனே கிடையாதே’னு டைரக்டருக்கு அதிர்ச்சி. 'சத்யராஜ் சொன்ன மாடுலேஷனைக் கேட்டுச் சிரிச்சிட்டேன். இன்னொரு தடவை சொல்லிக்காட்டுங்க’னு கமல் சார் சொல்ல, நான் சொல்ல, யூனிட்டே சிரிச்சது.

நான் லொள்ளு, ஜொள்ளா நடிச்சிட்டு இருந்தப்ப, என்னை வேற கலர்ல காமிச்ச 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ படத்தைத் தயாரித்தார் கமல் சார். அதோட 150-வது நாள் விழாவில் சிவாஜி சார் தலைமையில் ஆர்.சி.சக்தி, மணிவண்ணன் ரெண்டு பேரையும் கௌரவிச்சார். 'இது என்ன கூட்டணி’னு கேட்டதுக்கு, 'என்னை இனம் கண்டு கொண்டவர் ஆர்.சி.சக்தி, உங்களை இனம் கண்டுகொண்டவர் மணிவண்ணன்’னு சொன்னார். அந்த மனசு... அதான் கமல் சார்!''

0 comments:

Post a Comment