Ads 468x60px

Saturday, December 8, 2012

விஸ்வரூபம் ஆடியோ - ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு

புதுமைகளின் தலைவன் கமல்ஹாசன் இம்முறை விஸ்வரூபம் ஆடியோவை  தமிழகத்தின் மூன்று மாநகரங்கள் மதுரை, கோவை மற்றும் சென்னையில், தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் வெற்றிகரமாக வெளியிட்டார்.

மூன்று ஊர்களில் நடத்த முடியாது, அப்படியே நடத்தினாலும் கூட்டம் கூடாது என்று "மன்னிப்பு காந்த்" ரசிகர் இணையத்தில் கூவிக்கொண்டிருந்தனர். விழாவை நடத்திக் காட்டி கமல்ஹாசனும், விழா மைதானத்தை நிரப்பி கமல் ரசிகர்களும், "மன்னிப்பு காந்து ரசிகர்களை புகைய விட்டு விட்டார்கள்.

மதுரை மற்றும் கோவையில் கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் விழா மைதானத்திற்கு வந்திறங்கினார். சென்னையில் ஹெலிகாப்டருக்கு தடை இருப்பதால் சென்னை கமல் ரசிகர்களுக்கு அந்த காட்சியை நேரடியாக காண முடியவில்லை, எனவே விழாவை நடத்தி ஜெயா டிவி, மதுரையில் தலைவர் ஹெலிகாப்டரில்  இறங்கியதை காட்டி புண்ணியம் தேடிக்கொண்டது.


விஸ்வரூபம் ஆடியோ வெளியீட்டிற்கு, சென்னை ராயபேட்டை YMCA-ல், ORKUT கமல்ஹாசன் நற்பணி இயக்கம் (பதிவு எண் 10094) மற்றும் பாரடைஸ் யூனிட் கமல் பக்தர்கள் இணைந்து வைத்த பேனர்கள் இங்கே...












விழா மைதானத்திற்கு வெளியே கமல் பகதர்கள் நடத்திய பூஜைகள்....



அரசியல் கட்சி மாநாட்டுக்கு நிகராக, 500க்கும் மேற்ப்பட்ட போலீஸார்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்பில் ஈடுபட்டு, விழாவை அமைதியான முறையில் நடத்தி கொடுத்த தமிழக போலிஸாருக்கு இப்பதிவின் மூலமாக, கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

விழா தொடங்க சிறிது கால தாமதம் ஆனதால், "ரேடியோ" சங்கர் என்ற கமல் பக்தர்,


கமல்ஹாசனை பற்றி இப்படி கத்திக் கொண்டும்,


"தலைவா... உன்னை நினைக்காத நாள் என் நினைவு நாள்"
இப்படி  பாடிக் கொண்டும்,

"மண்ணானால் நான் பரமக்குடியின் மண்ணாவேன்....
சொல்லானால் நான் கமல் என்னும் சொல்லாவேன்..... 
செருப்பானால் நான் கமல் காலில் செருப்பாவேன்..."

அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார்.

உலகநாயகன் விழா மேடைக்கு வந்த போது ஆர்பரித்த கமல் ரசிகர்ளின் வீடியோ இங்கே...


உலகநாயகன் விழா முடிந்து சென்ற போது அவர் காரை சூழ்ந்த கமல் ரசிகர்ளின் வீடியோ இங்கே...





 விழாவின் ஹைலைட்டுகள்.....

மேடையில் கமலிடம்  ஜெயராம் கேட்ட கேள்வி இது தான், " சார், நீங்க ஹாலிவுட்டு போகப் போறீங்க, அங்க போய் எந்த நடிகையை முத்தமிட ஆசைபடுகிறீர்கள்". தலைவரின் பதில் இது தான், " ஏங்க நான் என்ன கிஸ் கொடுக்கவா ஹாலிவுட்டுக்கு போகிறேன்? எச்ச பண்றதுகாக யாராவது ஹாலிவுட்டுக்கு  போவாங்களா?". கமல் நம்ம மீடியாக்காரர்களின் அறிவாளித்தனத்தை தோலுறிக்க, ஜெயராமை அவரே இப்படி கேட்க சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன், இப்படியாவது அவனுங்க திருந்தினா சரி தான்....

 கே.எஸ்.ரவிக்குமார் மேடையில் ஆழ்வார்பேட்டை ஆண்டவா, வருஷத்திற்கு ஒரு படம் நடித்து தனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருந்தார் ( கோச்சடையான் வேலைக்கு ஆகாது என்று தெரிந்து விட்டது போல....)

A.R.முருகதாஸூம் தன் பங்குக்கு வாய்ப்பை இப்படி கேட்டார். கமல் சாரிடம் பேசிக்கொண்டிருந்த போது சிவாஜி என்ற சிங்கத்திற்கு ஒரு கட்டத்தில் தயிர் சாதம் மட்டுமே கொடுத்தார்கள், தனக்கும் அப்படி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தான், எனக்கான சமையலை நானே தயார் செய்து கொள்கிறேன் என்றார். ஆனால் நான் ரிடையர் ஆவதற்கு முன்னால், உங்களுக்கான சமையலை நான் தயாரிப்பேன் என்று கமல்ஹாசனிடம் மீண்டும் வாய்ப்பு கேட்டார்.

டைரக்டர் வசந்த், மியூசிக் அக்டாமியின் சேர்ந்த ஒருவர் அவரிடம் கமல் எதையுமே விட்டு வைக்கா மாட்டாரா என்று கேட்டாராம்.  என்னவென்றால், விஸ்வரூபத்தில் கமல் "கொன்னக்கோல்"  பாடியிருக்கிறாராம். எந்த பாட்டு என்று உங்களுக்கு தெரிகிறதா?

5 comments:

  1. Thank you Karan saga for getting the passes for our orkut gang. We couldn't have seen this event without you

    ReplyDelete
  2. Kamalhaasan's thinking is always ahead of all in Indian cinema !!!

    Your writing is always ahead of all the other Kamal fans !!!

    Super sharing Sandiyar SAGA !!!

    ReplyDelete
  3. VERY WELL WRITTEN SAGA.....keep up the good work..

    ReplyDelete