Ads 468x60px

Wednesday, July 2, 2014

காவிரிமைந்தனுக்கு வைகைமைந்தன் சண்டியர்கரனின் பதில்கள்

http://vimarisanam.wordpress.com -ல் காவிரிமைந்தன் என்பவர் பல கேள்விகளை கமல்ஹாசனிடம் கேட்கிறார். இவர் வகுப்பறையில் வாத்தியாரிடம் கேள்விகள் கேட்டிருக்க மாட்டார், வலையில் யாரிடமும் தைரியமாக கேட்கலாம் என்று கமல்ஹாசனிடம் நிறைய கேட்டிருக்கிறார்.

உங்களுக்கு பதில் சொல்ல கமல்ஹாசன் தேவையில்லை...நானே போதும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.



காவிரிமைந்தனின் கேள்வி:


சினிமாவுக்கு எந்த அரசும் நல்லது செய்யவில்லை……..
நான் இந்த அரசை மட்டும் சொல்லவில்லை.
இந்தியா முழுவதும் இருக்கிற பதினைந்து அரசாங்கத்தையும்
தான் சொல்கிறேன். ’’ என்று பேசினார்…..
(முதல் வார்த்தையைச் சொல்லி விட்டு, எப்படிப் புரிந்து
கொள்ளப்படுமோ என்று பயந்து போய், “இந்த அரசை மட்டும்
சொல்லவில்லை. இந்தியா முழுவதும் இருக்கிற பதினைந்து
அரசாங்கத்தையும் தான் சொல்கிறேன்” என்கிறார்.
இந்தியாவில் இருப்பது 15 அரசாங்கம் அல்ல -
29 மாநில அரசுகள், யூனியன் ஆட்சிப் பிரதேசங்கள்,
மற்றும் மத்திய அரசு என்பது கமலுக்குத் தெரியாதா என்ன ?
சொன்ன பிறகு ஏற்பட்ட பதட்டம் – 15 அரசு என்று சொல்கிறார்…)

எனது பதில் :

கமல்ஹாசன் குறிப்பிடுவது 15 மாநிலங்களை அல்ல.. 29 மாநிலங்களை ஆளும் 15 கட்சிகளை. விவரம் அறிய கிளிக் செய்க
 http://www.mapsofindia.com/maps/india/states-political-parties.html

காவிரிமைந்தனின் கேள்வி:

சினிமாத் துறைக்கு இதைவிட அதிகமாக அரசாங்கம்
என்ன செய்ய வேண்டும்….? ஏன் -எதற்காக செய்ய வேண்டும் ..?
 
எனது பதில் :   

கமல்ஹாசன் அரசாங்கங்களிடமிருந்து சினிமாவிற்கு கேட்பது லட்சங்களை அல்ல. முறையாக சென்சார் செய்யப்பட்ட பிறகும் ரிலீஸ் நேரத்தில் கட்டப் பஞ்சாயத்துகாரர்கள் செய்யும் சென்சாராரிடம் இருந்து சினிமாவை காக்க சொல்கிறார்.திருட்டு வீடியோ, திருட்டு CD ஆகி இன்று திருட்டு DVD ஆகி விட்டது, அந்த திருட்டு தொழிலை முற்றிலும் முடக்க  நடவடிக்கை எடுக்க கேட்கிறார்.

காவிரிமைந்தனின் கேள்வி:

மற்ற துறைகளை விட சினிமாத்துறை எந்த விதத்தில் சிறந்தது ?
எந்த விதத்தில் அது விசேஷ உதவிக்கு தகுதியான்து ?

எனது பதில் :

யாராகினும் தான் சார்ந்த துறைக்கு தான் அரசாங்கத்திடம் உதவி கோருவார்கள், சினிமாவிற்காக கேட்காமல் வாகன துறைக்காகவா கேட்க சொல்கிறீர்கள்?

காவிரிமைந்தனின் கேள்வி:

 இன்றைக்கும் கூட, நவீன வசதிகள் எதுவும் இல்லாத
குக்கிராமங்களில், ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு,
இரவு பகல் எப்போதாக இருந்தாலும் சளைக்காமல், அலுக்காமல்
பிரசவம் பார்க்கிறாரே ஒரு மருத்துவச்சி -அவரை விட,
- ரணம் புழுத்து நெளியும் இறுதிகட்ட நோயாளிகளுக்கு,
கேன்சர் ஆஸ்பத்திரியில், முகம் சுளிக்காமல், புண்ணைத் துடைத்து,
பணி புரிகிறாரே – அந்த செவிலியரை விட,
- கொட்டும் மழையிலும், நடுங்கும் குளிரும் – கண் மூடாமல்,
துப்பாக்கியைக் கையில் பிடித்துக்கொண்டே காஷ்மீர் எல்லையில்
பணியில் ஈடுபட்டிருக்கிறாரே – அந்த ராணுவ வீரரை விட -
உங்களைப் போன்ற சினிமா நடிகர்கள், இந்த சமுதாயத்திற்கு என்ன
சேவை செய்து கிழித்து விட்டீர்கள் – ஸ்பெஷலாக கவனிக்க …?


எனது பதில் :

கஷ்டப்பட்டு மிகப்பெரிய வீர வசனம் எழுதிருக்கீங்க...ஆனா கேள்வியை தான் சரியா புரிஞ்சிக்காம எழுதிருக்கீங்க...அவர் சினிமா நடிகர்களுக்கு கேட்க வில்லை....சினிமா துறைக்கு தான் கேட்கிறார்.


காவிரிமைந்தனின் கேள்வி:

பெரும்பாலான சினிமாக்கள் சமூகத்தின் நலனில் சிறிதும்
அக்கரையின்றி தான் எடுக்கப்படுகின்றன…. 2 மணி நேர படத்தில்,
ஒன்றரை மணி நேரம் ஹீரோவும், அவனது நண்பர் கூட்டமும்

சாராயக்கடையில் கூத்தடிப்பதாகத் தான் இன்றைய தினம்

படங்கள் வருகின்றன. நாலு சண்டை, அரைகுறை ஆடைகளோடு

கூச்சலுடன் கன்னா பின்னாவென்று இரண்டு குத்துப்பாட்டு,

சாராயக்கடை அசிங்கங்கள் – இவற்றை கலை என்று சொல்லி

அவர்கள் காசு சம்பாதிக்க – அரசு உதவி வேறு வேண்டுமா …?


ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படத்துறையில்
பிழைப்பு நடத்தும் நீங்கள் என்றைக்காவது தமிழ்த் திரைப்படங்களின்
இத்தகைய போக்கை கண்டித்திருக்கிறீர்களா ?
அரசைக் குறைகூறத் தெரிந்த உங்களுக்கு இன்றைய
திரைப்படங்களின் அவலமான போக்கை கண்டிக்க ஏன்
தோன்றவில்லை ? 


எனது பதில் :

கமல்ஹாசனும் இதை தான் கேட்கிறார் மக்களை. கெட்ட சினிமாக்களை புறக்கணியுங்கள் என்று. அப்பொழுது தான் நல்ல சினிமாக்கள் மட்டுமே உருவாகும் என்று.

காவிரிமைந்தனின் கேள்வி:
 
இன்று நீங்கள் கலந்து கொண்டிருக்கும் விழாவில்,
படத்தின் பெயர் என்ன …? (வாலிப ராஜா…..!)
அந்தப்படம் சமூகத்திற்கு தரப்போகும் செய்தி என்ன ….?
செய்யப்போகும் சேவை என்ன ….?
என்ன…? என்ன….?

எனது பதில் :
 
இளைய தலைமுறைய ஊக்குவிக்கத் தான் நான் அங்கு வந்திருக்கிறேன் என்று மேடையில் கூறினாரே கவனிக்க வில்லையா?

காவிரிமைந்தனின் கேள்வி:

உங்கள் படங்கள் வெளியிடப்படும் திரையரங்குகளில் -
பாப்கார்ன் என்ன விலைக்கு விற்கப்படுகிறது தெரியுமா …?

கோக்…? மற்ற குளிர்பானங்கள் …? காப்பி/தேநீர் ….?

ஏன் வெறும் தண்ணீர் பாட்டில் என்ன விலை தெரியுமா …?


எனது பதில் :

திரையரங்க உரிமையாளர்களிடம் கேட்கவேண்டிய நியாமான கேள்வி. நீங்க கூட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாமே... வெற்றி பெற்றால் தமிழக சினிமா ரசிகர்கள் எல்லாரும் உங்களை கொண்டாடுவார்கள்.


காவிரிமைந்தனின் கேள்வி:

உங்கள் புதிய திரைப்படத்தை வெளியிடும் முன்னர் ஒவ்வொரு
முறையும் எதாவது பிரச்சினையையும் பரபரப்பையும் கிளப்பி இலவச
ஆதாயம்-விளம்பரம் பெறும் நீங்கள் விஸ்வரூபம் – 2ஆம் பகுதியை
முடித்து 7 மாதங்களாகியும் இன்னும் வெளியிடாமல்

வைத்திருப்பதன் காரணமென்ன …?

“தகுந்த சூழ்நிலை”
இன்னும் உருவாகவில்லையா அல்லது
உருவாக்க திட்டம் இன்னும் தயாராகவில்லையா ….?


எனது பதில் :

தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். கமல்ஹாசனை சீண்டினால் நமக்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என்று மற்றவர்கள் கமல்ஹாசனிடம் பிரச்சினை செய்கிறார்கள்.

காவிரிமைந்தனின் கேள்வி:

இவ்வளவு அனுபவமும், திரைப்படத்துறையில்
விஷய ஞானமும் உள்ள நீங்கள் – ஆண்டுக்கு இரண்டு,
நல்ல தரமான, குறைந்த பட்ஜெட் படங்களை

எடுத்து வெளியிட்டால் என்ன ? எது தடுக்கிறது ?

ஏன் – உங்கள் எல்லா படங்களிலுமே நீங்கள் தான் நாயகனாக
நடிக்க வேண்டுமா..?


எனது பதில் :

தரத்தினை எதிர்பார்த்தால் விலை அதிகம் தான் கொடுக்க வேண்டும். இருப்பினும் உன்னை போல் ஒருவன் சின்ன பட்ஜெட் ரீமேக் செய்தார். அடுத்து "திரிஷ்யம்" ரீமேக் செய்கிறார். சின்ன பட்ஜெட் என்றாலும் பெரிய பட்ஜெட் என்றாலும் கமல்ஹாசனால் மட்டுமே அதை ஹிட்டாக்க  முடியும். இன்றும் 30 வயது தோற்றத்தில் இருக்கும் கமல்ஹாசன் ஹீரோவாக நடிப்பதில் அவ்வளவு வயிற்றெரிச்சலா?


காவிரிமைந்தனின் கேள்வி:

வெளியில், பொது நிகழ்ச்சிகளில் இளையராஜாவை இவ்வளவு
சிலாகித்துப் பேசும் நீங்கள் – உங்கள் படங்களில் அவரைப்

பயன்படுத்திக் கொள்ளாதது ஏன் …? உங்கள் படத்தின் “தரத்”திற்கு

அவர் பொருத்தமற்றவர் என்பதாலா ….?


எனது பதில் :

ரஜினி போன்ற நன்றி மறந்தவர்கள் இளையராஜாவின் நிழலில் இருந்து ஒதுங்கிய பிறகும், கமல்ஹாசன் மட்டுமே 2005 மும்பை எக்ஸ்பிரஸ் வரை தன் படங்களில் இசையமைக்க வைத்தார். சென்ற வருடம் கூட இளையராஜாவின் லண்டன் இசை நிகழ்ச்சிக்கு சென்று மேடையேறி பாடி விட்டு வந்தவர் உலகநாயகன் என்பதை வேண்டுமென்றே மறந்து விட்டீர்கள்.

காவிரிமைந்தனின் கேள்வி:

அண்மையில் நீங்கள் ஒரு விளம்பரத்தில் சொல்லி
இருந்தீர்கள். “நான் உரிய நேரத்தில், ஒழுங்காக வரி கட்டுகிறேன்.
மக்கள் அனைவரும் ஒழுங்காக வருமான வரி கட்ட
வேண்டும். நான் ஒரு பைசா கூட வரி பாக்கி வைக்கவில்லை
என்பதில் பெருமை கொள்கிறேன்”.
ரொம்ப சந்தோஷம். ஆனால் இதே போல் கொஞ்சம்
வெளிப்படையாக கடந்த ஆண்டு உங்களுக்கு வந்த வருமானம்
எவ்வளவு….? கட்டிய வருமான வரி எவ்வளவு ?
ஒரு படத்திற்கு எவ்வளவு கோடி சம்பளம் வாங்குகிறீர்கள் ..? -
போன்ற விவரங்களையும் சொல்ல முடியுமா ….?
நாங்கள் எல்லாம் சொல்கிறோமே எங்கள் வருமானத்தை
வெளிப்படையாக…! நீங்கள் ஏன் சொல்ல மாட்டேனென்கிறீர்கள் ..?


எனது பதில் :

பொருளாதாரம் படித்தவர் கேட்ட கேள்விகளிலேயே உச்சத்திலிருக்கும் மட்டமான கேள்வி இது தான். ஒருவர் இந்தியாவில் தான் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதை வருமான வரி அலுவலகத்தில் குறிப்பிட்ட படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து அதற்குரிய வரியை செலுத்தினால் போதும். வருபவர் போறவருக்கெல்லாம் சொல்ல வெண்டும் என்ற அவசியம் கிடையாது. அப்படி கமல்ஹாசன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து வைத்திருக்கிறார் என்ற ஆதாரம் உங்களிடம் இருந்தால், வருமான வரி அலுவலகத்தில் புகார் அளித்தால் அவர்கள் பார்த்து கொள்வார்கள்.

காவிரிமைந்தனின் கேள்வி:

ஆமாம் – இரவு பகலாக கண்விழித்து பணிபுரியும்
மருத்துவர்களை விட, விஞ்ஞானிகளை விட, ராணுவ வீரர்களை
விட, ஸ்விட்சர்லாந்திலும், நியூசிலாந்திலும், இள வயது
ஹீரோயின்களை கட்டிப்பிடுத்துக் கொண்டு டூயட் பாடும் உங்கள்
உழைப்பு எந்த விதத்தில் உயர்ந்தது ?
எந்த விதத்தில் கடுமையானது …?

எனது பதில் : 

தங்களுக்கு கல்யாணம் (50 வயதுக்கு மேல் ஆகியும்) ஆகவில்லை என்றால், பெற்றோரிடம் தங்கள் நிலைமையை எடுத்து கூறி கல்யாணம் செய்து வைக்க சொல்லவும். ஒருவேளை கல்யாணம ஆகியிருந்தால் உங்களுக்கு வந்திருக்கும் இந்த வியாதிக்கு நித்தியிடம் மருந்திருக்கிறாதா என்று விசாரிக்கவும். 

காவிரிமைந்தனின் கேள்வி:

இத்தனை ஆண்டுகளாக இந்த நாட்டு மக்களிடமிருந்து
இவ்வளவு பணம் சம்பாதித்திருக்கிறீர்களே … உங்களுக்கு
இத்தனை பணத்தையும், புகழையும் கொடுத்த இந்த மக்களுக்கு
நீங்கள் திரும்பக் கொடுத்திருப்பது என்ன …..?

எனது பதில் :  

அதான் ஒழுங்கா வரி கட்டுகிறார்ல... மக்களுக்கு தேவையானதை அரசாங்கம் தான் செய்ய வேண்டும். இருப்பினும், அவர் "பெற்றால் தான் பிள்ளையா" என்று எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான டிரஸ்ட் நடத்தி வருகிறார், தன் ரசிகர்களை இரத்த தானம், உறுப்பு தானம், உடல் தானம் செய்ய வைத்தது மட்டுமின்றி, முன்னுதாரணமாக முதலில் அவரே செய்திருக்கிறார், பல விழிப்புணர்வு விளம்பரங்களில் இலவசமாக நடித்துள்ளார்.

7 comments:

  1. வயதாக வயதாக ஞானம் வளரும்;
    ஆனால் சிலருக்கு வயதாக வயதாக பைத்தியம் பிடிக்கும்;
    இரண்டாவது பிரிவில் வருபவர் காவிரிமைந்தன்.
    இவரது தளத்தை முழுவதும் படித்துப் பாருங்கள் -
    பிற சமயத்தினரை கேவலமாக சித்தரித்து கட்டுரை எழுதுவார்;
    அய்யாவைத் திட்டுவார்; அம்மாவை தாலாட்டுவார்.
    கேட்டால், நான் நடுநிலைவியாதி என்று கூசாமல் சொல்லிக் கொள்வார்.
    இந்த மாதிரி ஒருமாதிரி மனிதர்களுக்கு பதில்சொல்லி, அவரை ஏன் வளர்த்து விடுகிறீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. யாரும் பதில் கூறவில்லையென்றால் தன்னை அதிமேதாவி என்று நினைத்து கொண்டு மேலும் மேலும் கேள்வி கேட்பார் என்று எழுதப்பட்ட பதில் தான் இது...

      Delete
  2. ஐயா காவிரிமைந்தருக்கு சரியான மூக்கறுப்பு

    ReplyDelete
  3. காவிரிமைந்தனுக்கு இப்படி பதில் அளித்தால் தகாது, அதை எவ்வாறு அவருக்கு செர்க்கனுமோ அதை சேர்க்க கடமைப்பட்டுள்ளேன்.

    ReplyDelete
  4. காவிரிமைந்தனுக்கு இப்படி பதில் அளித்தால் தகாது, அதை எவ்வாறு அவருக்கு செர்க்கனுமோ அதை சேர்க்க கடமைப்பட்டுள்ளேன்.

    ReplyDelete