Ads 468x60px

Monday, February 23, 2015

ரஜினி படங்கள் எப்படி ஓட்டப்படும்?

தெரிந்து கொள்ளுங்கள் இனியாவது....

ரஜினியின் UTTER FLOP படங்கள் எல்லாம் 50-100 நாட்கள் வரை ஓட்டப்படும்...

ரஜினியின் FLOP படங்கள் எல்லாம் 100-175 நாட்கள் வரை ஓட்டப்படும்...

ரஜினியின் AVERAGE படங்கள் எல்லாம் 175-365 நாட்கள் வரை ஓட்டப்படும்...

ரஜினியின் HIT படங்கள் எல்லாம் 365 நாட்களுக்கு மேல் ஓட்டப்படும்...

Wednesday, February 18, 2015

மூன்றாம் பிறை சாதனைகள்

ஒரே ஊரில் 3 தியேட்டர்களில் 200 நாட்களுக்கு மேல் ஓடிய ஒரே படம்
உலகநாயகனின் "மூன்றாம் பிறை" மட்டுமே!!!

ஷிப்டிங் ஆகாமல் தினசரி 4 காட்சிகளாக 329 நாட்கள் ஓடிய ஒரே தமிழ் படம் உலகநாயகனின் "மூன்றாம் பிறை" மட்டுமே!!! அதுவும், சென்னை சத்யம் காம்ப்ளக்ஸில் அந்தச் சாதனையை புரிந்திருக்கிறார் கமல்ஹாசன்!!!

மற்ற நடிகர்களோ தியேட்டருக்கு வாடகை கொடுத்து சென்னை பேபி ஆல்பட்/ பால அபிராமி/ சாய் சாந்தியில் தான் வெள்ளி விழாவே பார்த்திருப்பார்கள்.

மேலும் மூன்றாம் பிறை, சென்னை சத்யம் காம்ப்ளக்ஸ் சுபம் தியேட்டரில், தொடர்ந்து 624 காட்சிகள் (156 நாட்கள்) ஹவுஸ்புல் சாதனையும் புரிந்திருக்கிறது.

உலகநாயகன் முதல் முறை கதாநாயகனாக, சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.



Tuesday, February 17, 2015

ஹேராம் தினம் 18-பிப்ரவரி

சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் மட்டும் முதலீடு செய்பவர் உலகநாயகன் கமல்ஹாசன் மட்டுமே என்பதற்கு மற்றொருமொரு உதாரணம் "ஹேராம்" என்ற துணிச்சலான படைப்பு!!!

அப்படி கமல்ஹாசன் செய்யும் முதலீடு சில சமயம் விஸ்வரூபமாக அவருக்கு லாபம் கொடுப்பதுண்டு, சில சமயம் சினிமா தொழில்நுட்பகலைஞர்களுக்கு சிறந்த புத்தகமாக அமைவதுண்டு.

அப்படி ஒரு திரை-நாவலாக, இந்திய சுதந்திரத்திற்கு பின்னால் இருந்த அரசியலை, படைத்திருந்தார் இயக்குநர் கமல்ஹாசன்.

இன்றும் ஹேராமை டிவியிலோ டிவிடியிலோ பார்க்கும் இன்றைய தலைமுறையினர், படத்தை பார்த்து விட்டு சமூக வலை தளங்களில் சிலாகிப்பதை பார்க்கும் போது, இயக்குநர் கமல்ஹாசன் இன்னும் பல தலைமுறைகள் தாண்டி கொண்டாடப்படுவார் என்பது மட்டும் புரிகிறது.



அன்றிலிருந்து....

நாயகன், குணா, தேவர் மகன், மகாநதி, குருதிப்புனல், ஹேராம், ஆளவந்தான், அன்பே சிவம், விருமாண்டி, தசாவதாரம், விஸ்வரூபம்

என்று தமிழ் சினிமாவிற்கு சிறந்த படைப்புகளை அடையாளம் காட்டி கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் ரசிகர்களின் ரசனையை கமல்ஹாசன் மாற்றி விட்டதால், இன்றைய காலத்தில் "வித்தியாசமாக எதுவும் இல்லாத" சினிமா வெற்றி பெறுவதில்லை!!! உதாரணம் நான் சொல்ல தேவையில்லை... அப்படிப்பட்ட படத்தை வாங்கி வெளியிடும் விநியோகிஸ்தர்கள் நஷ்டப்பட்டு "மெகா பிச்சை" எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

Monday, February 16, 2015

வறுமையின் நிறம் சிவப்பு சாதனைகள்

வறுமையின் நிறம் சிவப்பின் தெலுங்கு ரீமேக் "Aakali Rajyam" ஆந்திராவில் 8 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியுள்ளது.

வறுமையின் நிறம் சிவப்பு சென்னையில் 3 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியுள்ளது.

மற்ற ஊர்களில் இந்த படத்தின் சாதனைகள் தெரிந்தால் கமெண்ட் செய்யவும்.

விநியோகிஸ்தர்களே பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளிய ரஜினி சாதனையாளரா? அல்லது 1980களிலேயே ஆந்திரா, கர்நாடகா, கேரளா, வட இந்தியா என பல பகுதிகளில் வெள்ளி விழா சாதனை நிகழ்த்திய கமல்ஹாசன் சாதனையாளரா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Thursday, February 12, 2015

"இந்திரன் சந்திரன்" சாதனைகள்

ஒரு ஹீரோவின் மற்ற மொழிப்படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு பல முறைகள் 100+ நாட்கள் ஓடியிருக்கின்றன என்றால் அது உலகநாயகன் கமல்ஹாசனுடைய படங்கள் மட்டும் தான்.

உலகநாயகனின் Indrudu Chandrudu (தெலுங்கு) ஆந்திராவில் வெள்ளிவிழா கொண்டாடியது.

தமிழில் "இந்திரன் சந்திரன்" என டப் செய்யப்பட்டு சென்னையில் 100 நாட்கள் ஓடியது.


Monday, February 9, 2015

பாசவலை சாதனைகள்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், பல முறைகள் 100+ நாட்கள், 175+ நாட்கள், 365+ நாட்கள் கொண்டாடிய இந்தியாவின் ஒரே கலைஞன் நம் உலகநாயகன் மட்டுமே!!!

Subha Sankalpam (பாசவலை)
ஆந்திராவில் 35 தியேட்டர்களில் 50 நாட்களுக்கு மேலும்,
15 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேலும்,
தமிழில் பாசவலையாக டப் செய்யப்பட்டு சென்னையில் 100 நாட்களும் ஓடி சாதனை படைத்துள்ளது.

Subha Sankalpam celebrated 50 days in 35 Theaters and 100 days in 15 Theaters of Andhra Pradesh!!! Also it is dubbed as Paasavalai in Tamil and celebrated 100 days in Chennai. 

ஆனால் மீடியா மட்டும் புகழும் ரஜினியின் சாதனை, சென்னை பால அபிராமி தியேட்டர் அல்லது பேபி ஆல்பட்டில் மட்டுமே இருக்கும், அதுவும் காலை 9 மணி காட்சி!!! 

இன்றும் கூட இரண்டாவது காட்சியிலேயே அவர் ரசிகர்களாலேயே வெறுத்து ஒதுக்கப்பட்ட லிங்கா, சென்னை பேபி ஆல்பட்டில் ஒரு காட்சி கூட இல்லாமல், நாளிதழ்களில் விளம்பரமாக மட்டும் ஓட்டி கொண்டிருக்கிறார்கள்.

Friday, February 6, 2015

விஸ்வரூப தினம் (பிப்ரவரி-7)


எப்படி கமல்ஹாசனை புகழ்ந்தாலும், அதற்கும் மேல் சாதனைகளை செய்து, தன்னை புகழ்ந்தது சரியே என்று நிரூபித்து விடுவார் உலகநாயகன்!!!

விஸ்வரூபத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய பாடலில் ஒரு வரி வரும்....

"தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் ஞாபகம் வருகிறதா?...." என்று

விஸ்வரூபம் வெளியாகும் முன் இந்த பாடலை கேட்டவர்கள், கமல்ஹாசன் இயக்கத்தில் தயாராகும் படத்தில் ஹீரோவை புகழும் பாடலா? என்றார்கள்.

ஆனால் அவர்களே, "இந்த வரி கண்டிப்பாக கமல்ஹாசனுக்கு மட்டுமே பொருந்தும்" என்றார்கள்!!! விஸ்வரூபம் வெளியாவதற்கு போடப்பட்ட பல தடைகளை உலகநாயகன் தகர்த்தெறிந்த பின்...

விஸ்வரூபத்தால் உலகநாயகன் செய்த சாதனைகள் :

  1. ஹீரோவே இயக்கி தயாரித்து 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் இந்தியப் படம்
  2. அண்டை மாநிலங்களில் வெளியாகி, ரண்டு வாரங்கள் கழித்து தமிழகத்தில் வெளியாகி மெகா ஹிட்டான ஒரே படம்
  3. தமிழர்கள் பல மாநிலங்கள் (கேரளா,கர்நாடகா,ஆந்திரா) சென்று பார்த்த ஒரே படம்
  4. சென்னை சத்யம் காம்ப்ளக்ஸில் 4 தியேட்டர்களில் வெளியான முதல் படம், மேலும் அந்த 4 தியேட்டர்களிலும் 3 வாரங்கள் ஓடி, 1 தியேட்டரில் 100 நாள் கொண்டாடிய படம்
  5. இந்தியா முழுவதும் 3 மொழிகளில் மெகா ஹிட்டான கடைசிப்படம்      ( 2013ல் வெளியாகி இன்று 2015 பிப்ரவரி வரை )

சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் 2013ல் கொண்டாடப்பட்ட "விஸ்வரூப" திருவிழா!!!



உலகநாயகன் ரசிகர்களின் மற்ற சில "விஸ்வரூப" கொண்டாட்டங்கள்...

சென்னை உலகநாயகன் ரசிகர்களின் "விஸ்வரூப" பேனர்கள்...


சென்னை உலகநாயகன் ரசிகர்களின் "விஸ்வரூப" போஸ்டர்கள்...


Tuesday, February 3, 2015

சண்டியர் - துவக்க விழா

மற்ற தமிழ் படங்கள் போல் பூஜையை சென்னையிலே போடாமல், உலகநாயகன் தன் "சண்டியர்" படத்தின்  துவக்க விழாவை "மதுரை மாநகரில்" 2003-ல் நடத்தினார்!!!

அது மட்டுமல்ல, "சண்டியர்" பட துவக்க விழா அழைப்பிதழை, வித்தியாசமாக,  முதல் தகவல் அறிக்கை(FIR) மாடலில் உருவாக்கி, புதுமையை புகுத்துவதில் என்றுமே தானே முன்னோடி என்பதை அழைப்பிதழிலும் நிரூபித்திருந்தார் உலகநாயகன் கமல்ஹாசன்!!!

இந்த விழாவிற்கும் என் தளத்தின் (www.SandiyarKaran.com) பெயருக்குமே மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. இந்த விழாவில் தான் முதல் முறையாக என் தலைவன் கமல்ஹாசரை நேரில் பார்த்தேன்.

பின், "சண்டியர்" என்ற அடைமொழியை என் பெயருடன் இணைத்து  YAHOO GROUPS-ல் பயன் படுத்த தொடங்கினேன், அப்படியே ORKUT, BLOG, FACEBOOK, TWITTER என  என் பெயருடன் கலந்து விட்டது.

தினமலரில் "சண்டியர்" துவக்க விழா மதுரையில், என்று படித்தவுடன் காலையிலே மதுரைக்கு கிளம்பி விட்டேன், அங்கு காலை 11 மணியளவில், பெரியார் பேருந்து நிலையத்திலுருந்து விழா நடக்கும் மைதானத்திற்கு பஸ் ஏறினேன், அந்த இடத்திற்கு செல்லும் வரை எத்தனை வித விதமான "கமல் போஸ்டர்கள்"!!! இன்றிருப்பது போல கேமரா போன் என்னிடம் அன்றிருந்திருந்தால், அத்தனை போஸ்டர்களையும் கண்டிப்பாக உங்கள் பார்வைக்கு இணைத்திருப்பேன்!!!

மாலை 4 மணியளவில் கமல் பக்தர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து மைதானத்திற்கு கார்களிலும் வேன்களிலும் வரத்தொடங்கினர். கமல்ஹாசன் நற்பணி இயக்க மாவட்ட நிர்வாகிகளுக்கும் விஐபிகளுக்கும் மேடைக்கருகில் இடம் அமைத்து வேலி போடப்பட்டிருந்தது, அதை தாண்டி ரசிகர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. வெயில் அடித்துக் கொண்டிருந்தாலும் முதல் வரிசையில் வேலி தாண்டி செம்மண் தரையில் இடத்தை பிடித்து விட்டேன்.

சிறிது நேரத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் தன் FACEBOOK அதிகாரப்பூர்வ  பக்கத்தில் ஏதேனும் அப்டேட் செய்தால் லைக்குகள் குவிவது போல, கமல் ரசிகர்கள் குவிந்தனர்.

என் இடமும் பறிபோனது, தனியாக சென்றிருந்ததால் பின் வரிசைக்கு தள்ளப்பட்டேன். இப்போது போல அன்றிருந்திருந்தால் மாவட்ட நிர்வாகிகளின் வரிசையில் உட்கார்ந்திருக்கலாம்.

கமல்ஹாசரை ஒரு முறை தூரத்திலிருந்து பார்த்தால் போதும் என்றிருந்த என்னை, "சண்டியர்" விழாவில் ஆரம்பித்து, உலகநாயகனின் அருகிலேயே கொண்டு நிறுத்தி விட்டது  "சண்டியர்" என்ற பெயர்!!!

மாலை 5 மணியளவில், "கொம்புல பூவ சுத்தி" என்ற பாடலில் வரும் நாட்டுப்புற பேண்டு குழு வாசிக்க ஆரம்பிக்க ஆட்டம் ஆரம்பமானது.

உலகநாயகன் எப்போது வருவார் என்று மட்டும் எதிர்நோக்கியிருந்த எனக்கு, என் ஆடைகள் செம்மண்ணால் பூசப்பட்டதை காண நேரமில்லை.

கருப்பு சட்டையுடன் பட்டு வேட்டியில் சண்டியர் கெட்டப்பில், விழா நாயகன் கமல்ஹாசர் மேடையில் தோன்றி, கைகளை கூப்பி ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவித்ததை கண்டு மெய்சிலிர்த்து கொண்டிருந்த போது, பின் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் எழுந்து முன்னே வர ஆரம்பித்து, நெரிசல் ஏற்பட்டு, கலைந்து, என் உயிர் மீண்டும் எனக்குள் வர ஆரம்பித்தது ("நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்கள்" என்ற செய்தி படித்தால் அது எப்படி என்று தோன்றும்? ஆனால் அன்று தான் புரிந்தது). அந்த அளவுக்கு நிற்க கூட இடம் இல்லாமல் ரசிகர்களால் மைதானம் நிரம்பியிருந்தது.



திரைத்துறையில், கமல்ஹாசன் மட்டுமே, தன் ரசிகர்களை மட்டும் வைத்து,  திறந்த வெளி மைதானத்தில் பட துவக்க விழா (சண்டியர்), ஆடியோ வெளியீட்டு விழா (விஸ்வரூபம்),  மக்கள் பிரச்சினைக்கு பேரணிகள்,
ரசிகர்கள் மாநாடு ( இரண்டு முறைகள் ) என நடத்தி காட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.