Ads 468x60px

Tuesday, April 15, 2014

டயலாக் தான் ரஜினி.... ACTION கமல் தான்!!!

ரஜினி பேசுவது வெறும் டயலாக் தான் ஆக்சன் இருக்காது.... கமல் எப்பவுமே ஆக்சன் தான் டயலாக் விட மாட்டார் என்பதை இந்த கட்டுரையை படிப்பவர்கள் அனைவரும் முடிவில் ஏற்றுக் கொள்வீர்கள்.

                                                                                                               நன்றி : தினமணி

பாட்ஷா படத்தில் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்னா மாதிரி என்று டயலாக் விடுவார். அந்த டயலாக்கின் அர்த்தம், ஒரு விஷயத்தை பற்றி ஒரு தடவை சொல்ற கருத்தை தான் எப்பவும் சொல்வேன் என்று அர்த்தம், அடுத்த நாள் மாற்றி சொல்வேன் என்று அர்த்தம் அல்ல.1996-ல் ஜெ. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை கடவுளால் கூட காப்பற்ற முடியாது என்றார், பின் அடுத்த ஜெ. ஆட்சியில் அவரையே தைரிய லட்சுமி என்றார், இன்று மேடையிலேயே புரட்சி தலைவி, அம்மா என்று கட்சிகாரர்களை போல பம்முகிறார்.

ஒக்கேனக்கல் பிரச்சினையில் முதலில் "அடிப்பேன் உதேப்பேன்" என்று சீன் போட்டார், பின்பு குசேலனை பெங்களூரில் ரிலீஸ் செய்ய, நான் அப்படி சொல்லவில்லை என்று மன்னிப்பு வேற கேட்டார்.

மாறாக, கமல் 80 களிலேயே எம்ஜியாரால் அரசியலுக்கு அழைக்கப்பட்டார். அன்று அவரிடம் "அரசியலுக்கு வர விருப்பமில்லை" என்று தன் கருத்தை தெரிவித்தது மட்டுமல்லாமல், இன்றும் அதே கருத்தில் நிலையாய் இருக்கிறார். 

"சிவாஜி" என்ற படத்தில் சிங்கம் சிங்கிளா தான் வரும், பன்னிங்க தான் கூட்டமா வரும் என்று, ரஜினி இப்படத்திற்கு முன் வெளிவந்த அர்ஜூனின் பட டயலாக்கை பேசியிருப்பார்.

ரஜினியின் படங்கள் அந்தந்த கால பாப்புலர் ஹீரோயின், டைரக்டர், மியூசிக் டைரக்டர், காமெடியன்கள் இல்லாமல் வெளிவந்தது கிடையாது. இதுக்கு பேர் தான் சிங்கிளா வருவதா? அப்படியே பாப்புலர்கள் கூட்டமாக வந்தாலும் தியேட்டர்காரர்களும் விநியோகிஸ்தர்களும் ரஜினி படத்தில் போட்ட பணத்தில் பாதியை கூட திரும்ப எடுப்பதில்லை.

கமல் படங்களிலோ பாப்புலர் காமெடியன்கள் அல்லது பாப்புலர் ஹீரோயின் அல்லது பாப்புலர் டைரக்டர் அல்லது பாப்புலர் மியூசிக் டைரக்டர் என்று யாரேனும் ஒருவரை வேண்டுமானால் பார்க்கலாம். ஆனால் அத்தனை பாப்புலர்களையும் ஒட்டு மொத்தமாக பார்ப்பது அரிதிலும் அரிது.

தசாவதாரத்தில் பத்து வேடங்களில் நடித்தது மட்டுமல்லாமல், கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தென்னிந்தியா அறியாத ஹிம்மேஷை இசையமைப்பாளராக்கி, பாப்புலர் காமெடியன்கள் இல்லாமல், தொழில்நுட்ப அறிவு கமல் அளவில் 1% கூட இல்லாதவரை இயக்க வைத்து, அப்படத்தை தென்னிந்தியாவின் உச்ச வெற்றியாக இன்றும் இருக்க வைத்த கமல்ஹாசனை "ONE MAN ARMY" என்று கூறுவது கூட குறைந்த பட்ச பாராட்டு தான்... விஸ்வரூபத்தில் இன்னும் பல படிகள் மேலே சென்று, தானே இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் மாறி, தான் மட்டுமே உலக சினிமாவின் ஒன் மேன் ஆர்மி என்று நிரூபித்து விட்டார்.

படையப்பா படத்தில் என் வழி தன் வழி என்று கூறுவார் ரஜினி. தன்னுடைய சொந்த பள்ளியிலே ஒரு ஏழை மாணவனுக்காவது இலவச கல்வி கொடுத்திருக்கிறாரா? அவரின் ரசிகர்களுக்கு தன் மகள் கல்யாணத்திற்கு பிரியாணி பொடுவேன் என்று சொல்லி 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது (இவரே பிரியாணி அரிசியை உருவாக்குகிறார் போல). இது தான் அவருடைய தனி வழி போல?

கமல் தனக்கு எத்தனை இடர்கள் வந்தாலும் நேர்மையான வழியில் தான் எதிர்கொள்வார். கருப்பு பணம் சேர்க்க மாட்டார். விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டும் நடிப்பார் அதுவும் சம்பளம் பெறாமல். அண்மையில் கூட 2014 பாரளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு விளம்பரத்தில் இலவசமாக நடித்துள்ளார். அப்படின்னா கமல் வழி தானே தனி வழி!

ரஜினி பேசுவது வெறும் டயலாக் தான் ஆக்சன் சுத்தமா இருக்காது.... கமல் எப்பவுமே ஆக்சன் தான் டயலாக் விட மாட்டார் என்பது புரிந்திருக்குமே...

9 comments:

  1. i am very grt follower of kamal ji but i don't know to read in tamil can any one translate in english whts written in that artwork of rajini

    ReplyDelete
    Replies
    1. madan kumar,

      first picture tells that "when he stands he was sivaiji"
      second picture tells that "when he sits he was mgr"
      third one tells that "when he falls down and excuses he is rajini"

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. to all mental fans including arumuga samy...

      if you feel anything is wrong in the article, discuss here...i can remove that content and will keep your comment alive...

      unnecessary arguments and abusive comments will be removed....

      Delete
    2. @Sandiyar Karan: If you are trying to write the other side of Rajini in your article, then you should also write the other side of Kamal. Example- Kamal's mystery relationship with Gauthami (yes, "Kamal vazhi thani vazhi" in this case), etc.

      If not, then your blog writings will become BIASED (already this is a biased blog, no doubt in that).

      Delete
    3. arumuga samy...

      i have written original side of rajini....but you r trying to change the focus of the article to the personal side....

      Delete
    4. arumuga samy...

      still u r not understanding the personal relationship.....so no use by arguing with u....

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. See.. Still you are deleting my valid comments. You are simply proving that, this is a BIASED blog just to satisfy Kamal fans and not the others ...

      Delete