Ads 468x60px

Thursday, March 20, 2014

சமூக அக்கறையுள்ள நாயகன் கமல்ஹாசன்

இந்தியாவில், சமூக அக்கறையுள்ள கலைஞர்களில் முதன்மையானவர் என்றும் கமல்ஹாசன் மட்டுமே, என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் நம் உலகநாயகன்.

ஓட்டு போட்டுவிட்டு வெளியே வரும் போது கைகளினால் யாருக்கு ஓட்டு போட்டேன் என்று 2004 லோக்சபா தேர்தலிலும், மீடியாக்கள் ஓட்டு போடும்போது ஒளிப்பதிவு செய்கிறார்கள் என்று தெரிந்தும் 2011 தமிழக சட்டசபை தேர்தலிலும் ஓட்டு போட்ட நடிகரால் தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த அவப்பெயர், இந்த 2014 லோக்சபா தேர்தலில், உலகநாயகன் கமல்ஹாசனால் துடைக்கப்பட்டது.

பணத்திற்கு வாக்களிக்காதீர்கள்...சுயமரியாதையை விற்காதீர்கள்...சிந்தித்து வாக்களியுங்கள் என்று இந்திய தேர்தல் ஆணையம் சார்பாக, இலவசமாக, தேர்தல் விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்து தனது சமூக அக்கறையை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளார் கமல்ஹாசன்.



இந்த வீடியோ தமிழக தேர்தல் ஆணையத்தால் 18-மார்ச்-2014 அன்று வெளியிடப்பட்டது. அதன் புகைப்படம் கீழே.

0 comments:

Post a Comment