Ads 468x60px

Thursday, November 7, 2013

கமல்ஹாசர் பிறந்த நாள் விழா 2013

உலக சினிமா வரலாற்றில் ரசிகர்களிடமிருந்து தன் சுயலாபத்திற்காக எதையும் எதிர்பார்க்காத ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.



தனக்காக இரத்தம் சிந்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மத்தியில், என் ரசிகன் என்றால் இரத்த தானம் செய் என்று கூறுபவர் கமல்ஹாசன். சொன்னது மட்டுமல்ல அதை 1980 களிலேயே நடிகர்ளிலேயே முன்னோடியாக செய்தும் காட்டினார்.


அவர் காட்டிய வழியில், இன்று வரை பல லட்ச லிட்டர் இரத்ததை தானம் செய்திருக்கிறார்கள் கமல் ரசிகர்கள்.

மற்ற நடிகர்களும் இவர் வழியில் அவர்களின் ரசிகர்களை ரத்த தானம் செய்ய வலியுறுத்த ஆரம்பித்த போது, கமல்ஹாசன் "கண் தானம்" , "உடல் தானம்" என்று அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார்.

தன் பின்னால் கூடிய கூட்டத்தை நல்வழி படுத்திய ஒரே நடிகர் உலக நாயகன் மட்டுமே. அப்படிப்பட்டவரின் பிறந்த நாள் நவம்பர் 7-ஐ உலக நற்பணி தினமாக அவர் ரசிகர்கள் கொண்டாடுவதில் வியப்பொன்றுமில்லை.

இன்று நடைபெற்ற நற்பணி விழாவின்  புகைப்படங்கள் உங்களுக்காக அடுத்த பதிவில்....மற்றவை இங்கே...

இன்றைய விழாவில் நாங்கள் வழங்கிய ஊன்றுகோல்  :


கமல் பக்தன் ரோபோ சங்கரின் சுவரொட்டி  :



கமல்ஹாசரை காண கூடியிருந்த ரசிகர்கள் :


நற்பணி விழா மேடைக்கு வரும் கமல்ஹாசர் :


ரசிகர்களை காணும் உலகநாயகன் :



மேலே உள்ள வீடியோவில், தன் ரசிகர்களால் சாலையில் டிராபிக் தடைபட்டு விட கூடாதென்று அவர்களிடம் கூறுவதை பார்த்தீர்களா? இவர் தான் நிஜ தலைவன்!!!!



2 comments:

  1. கரண், நீங்கள் வரும் ஞாயிறு சிவகாசி வருகிறீர்களா? விருதுநகர் தலைமை மன்ற அழைப்பிதழில் சிறப்பு அழைப்பாளராக உங்கள் பெயர் இடம்பெற்றிருந்தது?

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகா.... கடந்த வருடம் போலவே இந்த வருடமும் தவறாமல் கலந்து கொள்வேன்.

      Delete